புதன், 4 ஆகஸ்ட், 2010

பொய் முகங்கள்!(நன்றி -தினமணி,தலையங்கம் 04.08.10

திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது.




முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது.



"" நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்?



"" நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்''- இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான்.



ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர் 'என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக்" கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர் 'என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன?



முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது. வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது?



ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர் 'பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி. ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல.



பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.



உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர் 'என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை.



"கலைஞர் 'என்று கருணாநிதியையும்," அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸ ý ம், விஜயகாந்தும்.



"" நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்''என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா 'என்றும் தனது மகனை" சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம்.



விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன் 'என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை.



விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தவர் என்பதால் "கேப்டன் 'அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது.



கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸ ý ம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள்} அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்?



பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது. பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.



பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல. இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ ý க்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும்.



ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!

வியாழன், 22 ஜூலை, 2010

ஆர்.எஸ்.எஸ்-ம் , காந்தி படுகொலையும்.... ராஜேஷ் (திண்ணை ,03.06.2004)

ஆர்.எஸ்.எஸ். ஷாகா-க்களில் மூளைச்சலவை செய்யப்படுவதில்லை..சிறுவர் முதல் பெரியவர்வரை ஜாதிவித்தியாசம் பார்க்காமல் தேசபக்தியும், பண்புப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது...யார் எந்த ஜாதி என்பதே தெரியாமல் அனைவரும் பாரதமாதாவின் புதல்வனாக ஒன்றாக சங்கமிப்பது சங்கத்தில் மட்டுமே...எந்த தனிப்பட்ட ஜாதிக்கோ இனத்துக்கோ சொந்தமானதல்ல ஆர்.எஸ்.எஸ்....

ஷாகா-க்களில் எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியின் புகழும் பாடப்படுவதில்லை...ஆர்.எஸ்.எஸ், தேசம் முழுமைக்குமான இயக்கம்...தேசத்தை துண்டாட நினைப்பவருக்கு மட்டுமே நெருப்பு ஆர்.எஸ்.எஸ் ....


தமிழகத்தில் போற்றப்படும் கண்ணகியும் ,வட இந்திய சீதா தேவியும் ,கன்னடத்து வீர மங்கை சென்னம்மாவும், வால்மீகியும், ஏகலைவனும், கம்பனும் ,வான்புகழ் கொண்ட வள்ளூவனும், நாயன்மார்களும், ஆழ்வார்களும்,பஞ்சாப்கபீரும், குருநானக்கும்,,ராஜஸ்தானின் புகழ் பெற்ற கவிஞர் சையத் இப்ராகிம் ரசாக்கானும், தமிழகத்தின் ராஜேந்திர சோழனும், புகழ் பெற்ற விஞ்ஞானி சி.வி.ராமனும், மகாகவி பாரதியும், சட்ட மேதை அம்பேத்காரும், கேரளாவின் நாரயண குருவும் , புண்ணிய நதிகளாம் காவிரியும்,கங்கையும் மற்றும் பல தேசிய தலைவர்களும்,ஆன்மிக வாதிகளும் தினசரி ஷாகாக்களில் தேசிய ஒருமைப்பாட்டு பாடல் மூலம் நினைவு கூறப்பட்டு, போற்றப்படுகிறார்கள்...அதன்மூலம் தாமும் உத்வேகம் அடைகிறார்கள்....



1934-வார்தாவில் நடந்த ஆர்.எஸ்.எஸ்-ன் குளிர் கால முகாமான 'ஹேமந்த் சிபிர் '-யை பார்வையிட்ட மகாத்மா காந்தி, ஜாதி வித்தியாசம் இல்லாமல் இவர்கள் பழகும் விதம் தன்னை மிகவும் கவர்வதாக குறிப்பிட்டார்..நண்பர் பிறை நதி புறத்தான் அவர்கள் பொய்யான ,புரட்டான வாதத்தை அதாவது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் புகழை பாடுவதாக சுப்ரமணிய சாமி வகை புளுகை அவிழ்த்து விட்டுள்ளார்...இந்துக்களை ஜாதியின் பெயரால் பிரித்து கூறுபோட்ட பிரிட்டீஷார் இல்லாத பணியை சில திவிரவாத முஸ்லீம் இயக்கங்களும், வெளி நாட்டு பணத்தால் பாரத மக்களை மதமாற்றும் பல அன்னிய கிறுஸ்தவ மிஷனரிகளும்,சில நக்ஸலைட் இயக்கங்களும் பாரத முழுவதும் செய்து வருகின்றன...பிரித்தாளும் சூழ்ச்சி இனி வெற்றி பெறாது...



இஸ்லாமிய மதரஸாக்களில் செய்யப்படும் மூளை சலவையால்தான் பாரதம் உட்பட உலகம் முழுவதும் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது...மதத்தின் பெயரால் இவர்கள் எல்லை கடந்து தீவிரவாதிகளுக்கு போராடுவார்களாம்....கேட்டால் இவர்களை இணைப்பது இஸ்லாமின் சகோதரத்துவமாம்....எது சகோதரத்துவம்.... ?இஸ்லாமை ஏற்காதவர்கள் அனைவரும் காபீர்கள்(அழிக்கப்படவேண்டியவர்கள்) என்பது எந்தவகை சகோதரத்துவம்.. ? இந்த சகோதரத்துவத்தில் தான் ஒளரங்க சீப் போன்றோர் ஆயிரக்கணக்கான இந்துக்களை வாளாலும், யானையின் காலடியில் மிதித்து துவைத்தும் மதமாற்றினார்களா.. ? சீக்கிய 9-ம் மத குரு, தேஜ் பகதூரை சிரச்சேதம் செய்து உயிரற்ற உடலை சொந்த மகனே தின்ன செய்யதிட்டது எந்த வகை சகோதரத்துவம்... ? பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான இந்து பெண்களை கற்பழித்த முஸ்லீம்களின் செயல் எந்த வகை சகோதரத்துவம்.. ?


1. .பாகிஸ்தானில் மசூதியில் ஷியா பிரிவினரால் துப்பாக்கியால் சுடப்பட்டு சன்னி பிரிவு முஸ்லீம்கள் 53பேர் பலி....news.bbc.co.uk/2/hi/south...048992.stm


2 மசூதியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த ஷியா முஸ்லீம்கள் மீது சன்னி பிரிவு துப்பாக்கி சூடு 8 பேர் பலி 10 பேர் காயம்--பாகிஸ்தானின் கராச்சி ,இமாம் பார்கவா மசூதி 22/02/04.www.rediff.com/news/2003/feb/22pak.htm


3.பாகிஸ்தானில் கொத்தடிமைகளாக நடத்தப்படும் இந்துக்கள்(http://www.thinnai.com/pl0626037.html )--


இவை போன்று சவுதி அரேபியா மற்றும் உலகின் பல பகுதிகளிலும் நடப்பது என்ன சகோதரத்துவ துப்பாக்கி சண்டையா.. ? பெண்களை அடிமைகளாகவும் போகப்பொருளாகவும் நடத்துவது எந்த மதம்.. ?உலகில் மிக அதிக எண்ணிக்கையில் தீவிரவாதிகளை எந்த மதம் உற்பத்தி செய்கிறது...இஸ்லாம் தானே....முதலில் மத சகிப்புதன்மை என்ன என்பதை முஸ்லீம்களுக்கு கற்று கொடுங்கள்...


Frontline Vol.18, Issue 26, Dec.22-2001-Jan, 04, 2002--இல் A.G. NOORANI -என்ற தீவிர கம்யூனிஸ்ட் போர்வையில் எழுதி வரும் முஸ்லீம் தீவிரவாத எழுத்தாளரும் சுப்ரீம் கோர்ட் வக்கீலுமான Abdul Ghafoor Noorani என்ற மதவெறியர் வாய்க்கு வந்தபடி எழுதுபவர்...தீவிர தேசபக்தரான வீர தாமோதர சாவர்க்கர்தான் பிரிவினையை ஆரம்பித்து வைத்தவர் என கூறும் Abdul Ghafoor Noorani , தேசவிரோதி ஜின்னாவை சாவர்க்கரோடு ஒப்பிடுவது அயோக்கியத்தனம். .Abdul Ghafoor Noorani ஆர்.எஸ்.எஸ் பற்றி இது போல பல பொய்களை பத்திரிக்கைகளில் எழுதி நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து அதன்பின் (The Statesman, March 3, 2002,அன்று) நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டவர்...,


Father of nation என காந்தியை சொல்லக்கூடது என ஜனசங்க தலைவர் தீன தயாள் உபாத்தியாயா சொன்னதாக கூறும் நண்பருக்கு ஒரு கேள்வி,மகாத்மா என காந்தியடிகளை ஒரு போதும் அழைக்க மாட்டேன் என சொல்லி, மிஸ்டர் காந்தி என்றே கடைசி வரை சொன்ன தேச பிரிவினைக்கு காரணமான அலி ஜின்னா, ஏன் வந்தேமாதரம் (பாரத தாயே உன்னை வணங்குகிறேன் என பொருள்) பாட மாட்டேன் என்று சொன்னார்....அவர் மட்டுமா அவர்வழியை பின்பற்றி தானே இன்றுவரை முஸ்லீம்கள் வந்தேமாதரம் எனச்சொல்ல மாட்டேன் என்கிறார்கள் ....ஏன்.. ? மகாத்மா மற்றும் வந்தேமாதரம் முதலில் இதை உரக்க சொல்லுங்கள்..பிறகு பார்ப்போம்....உங்களில் எத்தனை பேர் பத்வா வாங்க போகிறீர்கள் என்று.... ?(சமீபத்தில் உ.பியில் வந்தேமாதரம் சொன்ன பல முஸ்லீம்களுக்கு பத்வா விதிக்கப்பட்டது நினைவிருக்கும்....)


நண்பர்கள் சிலர் தொடர்ந்து காந்தி படுகொலைக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்ற தவறான தகவலை பரப்பி வருகின்றனர்....உண்மையில் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை....காந்தியடிகளோடு சங்கத்துக்கு கருத்து வேறுபாடு மட்டுமே இருந்தது ....அளவுக்கு அதிகமாக முஸ்லீம்களை தாஜா செய்யும் , இப்போது உள்ள அரசியல்வாதிகள் செய்வதை கண்டிப்பது போலவே அந்த நேரத்தில காந்தியடிகளை ஆர்.எஸ்.எஸ் எதிர்த்தது....இதில் தவறு ஏதுவும் இல்லை....ப்ண்டித மதன் மோளவியா, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ,காந்தியடிகள் ,வல்லபாய் பாடேல் போன்றோர் ஆர்.எஸ்.எஸ்-ன் தன்னலமற்ற பணிகளை பாராட்டி உள்ளனர்...அவர்களுடன் சங்கம் எல்லா கொள்கைகளுடன் ஒத்துபோவதில்லை....


கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்-இல் இருந்தவன்....சிறிது காலம் காங்கிரஸ் கட்சியில் இருந்தவன்....காங்கிரஸ் கட்சியின் சார்பாக பல தேசிய போராட்டங்களில் பங்கெடுத்தவன்....ஆர்.எஸ்.எஸ்-ம், காங்கிரஸ்-ம் மிகவும் சாத்வீகமானவை என நினைத்து பின்பு விலகி விட்டவன்...அப்படிப்பட்ட கோட்ஸே செய்த செயலுக்கு எப்படி ஆர்.எஸ்.எஸ் பொறுப்பேற்க முடியும்...ஒருகாலத்தில் கோட்ஸே இருந்தது ஆர்.எஸ்.எஸ்-இயக்கத்தில் என்றால் காங்கிரஸிலும்தான் இருந்திருக்கிறானே... எனவே காந்தி படுகொலைக்கு காரணம காங்கிரஸ் என்று சொல்லலாமே.. ?

இன்றைய பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான நக்ஸ்சலைட்-கள் ஏதோ ஒரு காலத்தில் சிபிஐ அல்லது சிபிஎம் (கம்யூனிஸ்ட்) கட்சியில் இருந்தவர்கள்....பின் அந்த கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்து ,பிரிந்து போய் தீவிர வாத செயல்களில் இற்ங்கினால், அவர்கள் செய்யும் வன்முறைக்கு ஜோதிபாசுவுக்கு 1 ஆண்டு பொடா..., சீக்கியதலைப்பாகையை மறக்காமல் கட்டும் கம்யூனிஸ்ட் சுர்ஜித்க்கு2ஆண்டு கடுங்காவல் ....மற்றும் நம்ம நல்லக்கண்ணு & வரத ராஜனுக்கு ஒரு 5 வருடம் விதிக்கலாமா.. ?


பாரதத்தின் சுப்ரீம் கோர்ட் மற்றும் பல கமிஷன் விசாரணை முடிவுகளும் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தீர்ப்பு சொல்லி விட்டது.. ? காந்தி படுகொலை-க்கான காரணங்களை அறிய 'ஆத்மாசரண் 'ஸ்பெஷியல் கோர்ட், உயர் நீதிமன்ற விசாரணை,மற்றும் ஒய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி T. L.கபூர் தலைமையிலான கமிஷன் ஆகியவை தெள்ள தெளிவாக ஆர்.எஸ்.எஸ்-க்கும் காந்தி படுகொலைக்கும் துளியளவும் சம்பந்தம் இல்லை என்ற தீர்ப்பு சொன்னது மறந்து விட்டதா.. ? 100 சாட்சிகளையும், 407 documents-ம் மேற்கோள் காட்டிய கபூர் கமிஷன் ரிப்போர்ட் அடிப்படையில் அன்றைய மத்திய உள்துறை செயலாளர் திரு.R. N. Banerjee கூறிய என்ன தெரியுமா... 'ஆர்.எஸ்.எஸ்-யை சேர்ந்த யாருக்கும் காந்தி படுகொலைக்கும் தொடர்பில்லை ' எனபதே ஆகும்...மேலும் Kapoor Commission Report, Vol.II, p.75-இல் ஆர்.எஸ்.எஸ்-காந்தியின் கொள்கைகளில்(காந்தியிசம்) கருத்து வேறுபாடு கொண்டிருந்தது என்றும் குறிப்பிடிருந்தார்...அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் கூறும் போது ' இந்த விசாரணைகளுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் என்ற முறையில் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை நிலை ' என்றார்-- (Sardar Patel 's Correspondence:1945-1950, Ahamdabad, Navjeevan Publishing House, 1973). பின் 1978-இல் பாரளுமன்றத்தில் பிரதமர் மொரார்ஜி தேசாய் காந்தி படுகொலைக்கும் ஆர்.எஸ்.எஸ் -க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னார்..


.ஒரு பொய்யை ஒரு முறை சொல்வதில் வெட்கப்பட வேண்டும்....பல முறை சொன்னால்.. ? அதனால்தான் என்னவோ பல பத்திரிகைகளும்,சில அமைப்புகளும் அடிக்கடி சொல்லிவருகின்றன போலும்...