ஞாயிறு, 12 மே, 2013

தாய்மை போற்றுதும்... தாயை வணங்குதும்.( எஸ். குருமூர்த்தி )


தாய்மை போற்றுதும்... தாயை வணங்குதும்...

( தினமணி..........11 May 2013) 
வாழ்க்கையில் ஏற்பட்ட குடும்பச் சரிவாலோ, ஏழ்மையாலோ கலங்காத மனோபலம்; பின்பு, குடும்பத்துக்கு வந்த ஏற்றத்தாலும், செல்வத்தாலும் புகழாலும் சற்றும் மாசுபடாத உள்ளம்; எந்த விதமான மனசஞ்சலமும் இல்லாமல் "விதவா தர்மத்தை' 58 ஆண்டுகள் சாஸ்திர முறைப்படி அனுசரித்த ஒரு துறவியின் புனிதம்; பொன்னாசையோ, மண்ணாசையோ மட்டுமல்லாமல் மனிதர்களுக்கே இருக்கக்கூடிய சின்னச் சின்ன ஆசைகள் கூட இல்லாத பற்றற்ற அணுகுமுறை; குழந்தைகள், குடும்பத்தினர், உற்றார், உறவினர் இவர்களுக்காகத் தன்னலமில்லாமல் உடலை செருப்பாக்கி உதவும் இயல்பு, கடவுளிடமும் பெரியோர்களிடமும், குறிப்பாக, காஞ்சி மகா ஸ்வாமியிடம் அளப்பரிய பக்தி; பெரிய அறிவுரைகள் கூறாமல் மற்றவர்களின் மனதை தன்னுடைய நடத்தையால் மாற்றும் தவ வலிமை -- இந்த குணங்களெல்லாம் சேர்ந்து ஒரு மனித உருவம் எடுத்தால் எப்படி இருக்கும்?
÷கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தன்னுடைய 97-வது வயதில் இறைவனடி சேர்ந்த எனது தாய்தான் அந்த "மனித தெய்வம்'. எனக்கு இந்த ஜென்மாவில் கிடைத்த பெருமைகளில் எல்லாம் மிகப்பெரிய பெருமை, அவளுக்கு மகனாகப் பிறந்ததுதான் என்று நான் கருதுவதில் என்ன தவறு இருக்க முடியும்! அவள் குடும்பத்தில் வாழ்ந்த சந்நியாசி. அவளுக்குத் தெரிந்த மந்திரம் எல்லாம் நெறி தவறா வாழ்க்கையும், அறம் தவறாக் குடும்பமும், ஒருவருக்கொருவர் ஆற்றும் எதிர்பார்ப்பில்லாத உழைப்பும்தான்.
÷எந்த மாமியாரைப் பற்றி மருமகள்கள் நல்லபடியாகப் பேசுகிறார்களோ அந்த மாமியார் நல்ல மாமியார் மட்டுமல்ல, ஒரு உயர்ந்த குணம் உள்ளவராகத்தானே இருக்க முடியும்? என் தாயின் மேன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள, பொருளாதாரத்தில் வேறுபட்ட பல குடும்பங்களிலிருந்து வந்த அவருடைய நான்கு மருமகள்களிடமும் பேசினால் போதும்.
ஒரு கட்டத்தில் வயோதிகம் காரணமாக ஒன்பது ஆண்டு காலம் இயலாமை வாய்ப்பட்டு எனது தாய்க்கு மருமகள்கள்தான் எல்லா பணிவிடைகளையும் செய்யவேண்டும் என்கிற நிலைமையில் இருந்தபோதும்கூட, பக்தியுடனும் அவர்கள் தினசரி பணிவிடை செய்ததை வைத்தே அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என்பதை நாம் தீர்மானித்துக் கொள்ளலாம். தங்கள் மாமியார் காலமான பிறகு மருமகள்கள் ""எங்களுக்குத் தாயாகவும், ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருந்து எங்களுக்கு ஆசாரமும், கலாசாரமும், பதிபக்தியும், பண்பும், கூட்டுவாழ்க்கையின் உயர்வையும் சொல்லிக் கொடுத்த, நீங்கள் எங்களை விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே'' என்று அவர் மறைந்து பல நாட்கள் ஆன பிறகும்கூட அவரை அடிக்கடி நினைவுகூர்ந்து புலம்புகிறார்கள் என்றால், அந்த மாமியார் - என் தாய் - எப்படிப்பட்டவளாக இருந்திருக்க வேண்டும்? மருமகள்கள் மட்டுமல்ல, பேத்திகள், பேரன்களின் மனைவிமார்கள் எல்லோருமே இன்னும் கூட அவரது பிரிவின் துயரிலிருந்து மீண்டபாடில்லை. அப்படிப்பட்டவள் என் அம்மா.
÷அந்த நல்ல மருமகள்களை, அதற்குப் பிறகு அவர்களுடைய மகள்களை, மருமகள்களை உருவாக்கிய என் அம்மா, தன்னைப்போல் அடுத்த இரு தலைமுறைகளை உருவாக்கியிருக்கிறார் என்றுதானே பொருள்? நான் எழுதுவதில் ஒரு வார்த்தை கூட மிகையல்ல என்பதை என் குடும்பத்துடன் பழகிய நூற்றுக்கணக்கானோர் வழிமொழிவார்கள்.
÷இந்தக் காலத்துக்கு ஒத்துவராது என்று மேலைநாட்டு நாகரிகத்தைப் பார்த்து மயங்கும் பல படித்த மேதாவிகள் கருதுகிற, ஆனால், எந்தக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய, மன நிம்மதி தரக்கூடிய, வாழ்க்கை முறையை அவளிடமிருந்து பெற்ற எங்கள் கூட்டுக்குடும்பத்தில் என்னையும் சேர்த்து நான்கு பிள்ளைகள், ஒரு பெண். 15 பேரன்-பேத்திகள், இதுவரை பிறந்திருக்கும் 17 கொள்ளுப்பேரன்-பேத்திகள் உள்பட 37 பேர். அந்தப் பெரிய குடும்பத்துக்கு அவள் தலைவி மட்டுமல்ல, தெய்வமும் கூட!
÷அவள் பள்ளிக்கூடம் சென்றதில்லை. முறையாக எழுத்தறிவு பெற்றதில்லை. படிக்கத் தெரியும் அவ்வளவுதான். அவள் பிறந்தது விழுப்புரம் அருகில் இருக்கும் பாணாம்பட்டு என்கிற கிராமம். திருமணம் ஆனது தனது ஒன்பதாவது வயதில். அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுவாமிநாதன் என்பவரைத்தான் கணவனாக வரித்தார். 1950-களில் பல ஆண்டுகள் மழை பெய்யாததால், நிலங்களை ஒன்றுக்குப் பின் ஒன்றாக விற்க வேண்டியதாயிற்று. குடும்பம் வறுமைக்கோட்டுக்குள் நுழைகிறது. அந்த நிலையில் 1955-இல் கணவனை இழந்து விதவையாகிறாள் என் தாய். அப்போது அவளுக்கு வயது 39.
÷அதற்குப் பிறகு வறுமையுடன் போராட்டம். உற்றார், உறவினர்களின் உதாசீனம். பெரிய பிள்ளைகள், என்னுடைய இரண்டு அண்ணன்மார்கள், சென்னை சென்று, சிம்சன் கம்பெனியில் வேலையில் அமரும் வரை அந்தப் போராட்டம் தொடர்கிறது. பிள்ளைகள் தலை எடுத்து, கிராமத்தில் குடும்பத்தின் கெüரவம் திரும்பும்வரை அவள் அங்கிருந்து வெளியேறவில்லை. நான் பள்ளிப்படிப்பு படித்து முடிக்கும்வரை கிராமத்திலேயே இருந்துவிட்டு, அதன் பிறகுதான் சென்னை வருகிறாள் என் அம்மா.
காரணம், தலைகுனிந்து வெளியேற அவள் தயாராக இல்லை. தலைநிமிர்ந்த பிறகுதான் வெளியேற வேண்டும் என்கிற வைராக்கியத்தில் ஜெயித்த பிறகுதான் வெளியேறினாள். அவளது அந்த வைராக்கியம்தான் இன்று என்னைப் போற்றுவார் போற்றலுக்கும், தூற்றுவார் தூற்றலுக்கும் இடையில் தலைநிமிர்ந்து எந்த விமர்சனங்களையும் எத்தகைய பிரச்னைகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையை அளித்திருக்கிறது என்று கருதுகிறேன்.
சென்னையில் முதலில் ஒண்டிக்குடித்தனம். பின்பு நான்கு பிள்ளைகளும் படிப்படியாக நல்ல நிலைக்கு வந்து, திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்த பிறகுதான் சொந்த வீடு வாங்கினோம். அதற்கு முன்னால், 12 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு வீடு தர யாரும் முன் வராமல் இருந்த சோதனையான காலகட்டத்தையும் சிரித்துக்கொண்டே எதிர்கொண்டாள் என் தாய்.
÷பின்பு சொந்த வீடு வந்தது. அதன் பின் சொந்த வீடுகள் வந்தன. அம்மாவின் ஆசி பெற உற்றார் உறவினர், பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், என் தாயின் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் கிடையாது. வறுமையில் அவள் எப்படி துவளவில்லையோ அதேபோல் பெருமைகளும் அவளை மதிமயங்க வைக்கவில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல ஏற்றுக்கொண்டாள் அவள்.
அவளுக்கு எப்போதும்போல இரண்டு வெள்ளைப் புடவைகள் - ஒன்று அவள் மேல்; இன்னொன்று கொடியின் மேல் - மடிப்புடவையாக உலர்ந்து கொண்டிருக்கும். அவள் இறக்கும் வரை இரண்டே புடவைகள்தான்.
÷அவளுக்கென்று ஒரு பெட்டியோ, அலமாரியோ கிடையாது. அவளுக்கென்று வைத்துக்கொள்ள ஏதாவது இருந்தால்தானே பெட்டியும் அலமாரியும் தேவை? படுக்க ஒரு பாய் மட்டும்தான். மழைக் காலத்தில் பாயின் கீழே போட ஒரு கோணிப்பை; தலைக்கு வைத்துக்கொள்ள ஒரு மரக்கட்டை; குடிதண்ணீர் வைத்துக்கொள்ள ஒரு சொம்பு; ஜபம் செய்ய துளசி மாலை; படிக்க, பகலில் தினமணி பத்திரிகை, இரவில் ராமாயணம், கந்தபுராணம், மகாபாரதம் போன்ற புத்தகங்கள் -- இவ்வளவுதான் அவளுடைய ஆஸ்தி. அவள் கையில் ஒரு விசிறிதான் இருக்கும். எனக்கு இதுவே போதும் என்று நினைக்கும் மனப்பக்குவம் என் அம்மாவுக்கும் இருந்தது.
÷வராந்தாவிலோ கூடத்திலோ தரையில்தான் படுப்பாள் என் தாய். 2004-இல், இடுப்பில் எலும்புடைந்து வேறு வழியில்லாததால் என் தாய் கட்டிலில் படுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால் என் தாய் கட்டிலில் உயிர் விட்டாள். இல்லையென்றால் தரையில், பாயில்தான் உயிர் துறந்திருப்பாள். 2004-க்கு முன்னும், பின்னுமான வித்தியாசம் அவ்வளவுதான்.
அன்னத்தை அதிகம் சமைக்க வேண்டும் என்று கூறுகிறது உபநிஷதம். பிறருக்கு அளிக்காமல் தான் மட்டும் சமைத்து உண்ணுவது பாவம் என்கிறார் கிருஷ்ண பகவான். இந்த உயர்ந்த செயல்களை உபநிஷதத்தையும், கீதையையும் படிக்காமலேயே என் தாய் செய்து வந்தாள். எங்கள் வீட்டில் குறைந்தது, குடும்பத்தினர் அல்லாத ஐந்து அல்லது ஆறு பேராவது ஊர்க்காரர்களோ, நண்பர்களோ தங்கி இருந்து படிப்பதோ, வேலைக்குப் போவதோ சகஜமாக இருந்தது. எங்கள் ஊரில் இருந்த பலரும், சென்னையில் படிக்க, வேலை பார்க்க என்றால் நேராக எங்கள் வீட்டிற்கு வந்த விடுவார்கள். அம்மா இருக்கிறார்கள் என்கிற தைரியம் அவர்களுக்கு!
÷கூட்டுக்குடும்பமான எங்கள் வீட்டில் நாங்களே 20 பேர். தங்கியிருந்து படிப்பவர்கள் என நான்கைந்து பேர். மேலும் விருந்தினர்கள். அவ்வப்போது வரும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்கள். இவ்வளவு பேருக்கும் என் தாய்தான் சமைப்பாள், பரிமாறவும் செய்வாள். வீட்டில் எல்லோரும் உண்ட பிறகே, தான் உண்ணுவாள்.
÷1964-இல் சென்னை வந்த எங்களுக்கு குடும்ப டாக்டர் எங்கள் அம்மாதான். வாரா வாரம், ஏதாவது கஷாயங்கள் தந்துகொண்டே இருப்பாள். மிளகு, ஜீரா ரசம், மிளகு-வெந்தையக் குழம்பு போன்ற மருத்துவக் குணங்களுள்ள உணவைத்தான் சமைப்பாள். உணவின் மூலமே குடும்பத்தை நோய் நொடியில்லாமல் பாதுகாக்க முடியும் என்பதை மருத்துவம் படிக்காமலே அவள் படித்து வைத்திருந்தாள். இன்றுவரை நாங்கள் அம்மாவின் பாணியை மாறாமல் கடைப்பிடிக்கவும் செய்கிறோம். எங்கள் குடும்பத்தில் இன்றுவரை எந்தவிதமான பெரிய உடல் நலக்குறைவு இல்லாமல் இருக்க அதுவும் ஒரு பெரிய காரணம்.
÷காலை நாலரை மணிக்கு ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டே வீடு, வாசல் எல்லாம் பெருக்குவாள், தண்ணீர் தெளிப்பாள், கோலம் போடுவாள். இது அம்மாவுடைய 87 வயது வரை ஒரு நாள்கூடத் தவறாமல் தொடர்ந்தது. ஒரு நாளைக்கு 13-14 மணி நேரம் வேலை என்பது என் தாய்க்கு சர்வ சாதாரணம். மிச்ச நேரம் தான் ஜபமும், தூக்கமும்.
ஆசார அனுஷ்டானங்களில் அவள் நெருப்புபோல. சின்னக் குழந்தை கூட அவள் மேல் பட்டுவிட்டால் உடனே குளித்துவிட்டுத்தான் மறு வேலை. அந்த அளவுக்கு அவள் தன்னுடைய உடலைப் புனிதமாக வைத்திருந்தாள். நாங்கள் எங்கள் அம்மா மடியில் படுக்க வேண்டுமென்றால் இரவு 10 மணிக்கு அவள் படுக்கும்போதுதான் கிட்டே போக முடியும். விதவா தர்மத்தை அந்த அளவுக்குக் கடைப்பிடித்த, உண்மை சன்யாசி அவள்.
÷என் அன்னை பெண்ணாக இருந்தும், விதவை ஆன பிறகு, பொன்னைத் தொட்டது கிடையாது. நான் பார்த்து பொன்னே அணியாத, என் அம்மாவுக்கு கனகாபிஷேகம் செய்ய வேண்டும் என்று எங்கள் ஆசை. ஆனால், மறுத்துவிட்டார் அம்மா. அவள் இறந்த பிறகு, தகனம் செய்யும்போது அவளுடைய உடலில் ஒரு பவுன் நாணயத்தை வைத்தோம். மறுநாள் சஞ்சயனத்திற்கு அஸ்தி எடுக்கும்போது, அந்தத் தங்கக் காசு கொஞ்சமும் சேதமாகாமல், ஒரு மூலையில் மட்டும் சற்றுக் கருகி இருந்த நிலையில் கிடைத்தது. இதுவரை தங்கக் காசு அப்படியே கிடைத்ததே இல்லை என்று பிரமிப்புடன் சொன்னார் அங்கு இருக்கும் மயானக் காப்பாளர்.
தொண்ணூற்று ஏழு வயதில் என் தாயின் உடல், நிறத்தில் தங்கம்போல இருந்தது. இறந்த பிறகும் அப்படியே, பேத்திகளெல்லாம் பாட்டியின் கால், கை விரல்களுக்கு நகம் வெட்டும்போது, ""பாட்டி உன் கால், விரல்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது, ஏன் எங்களுக்கு அந்த அழகான கால்களையும் விரல்களையும் நீ கொடுக்கவில்லை?'' என்று கேட்கும் அளவுக்கு, அந்த வயதிலும் அழகானவளாக இருந்தாள் எங்கள் தாய். அது மனித உடல் இல்லையே, ஒரு யோகியின் உடல் அல்லவா, அதுதான் காரணமோ என்னவோ?
நான் பிரபல ஆடிட்டராகப் பெயர் எடுத்த பிறகும், பத்திரிகைத் துறையிலும் மற்ற துறைகளிலும் எனக்கு தேசிய அளவில் பெயரும் புகழும் வந்த பிறகும், என் தாய் "இதோ பார், என்னுடைய பிள்ளையை' என்று வெளியில் பேசியதே கிடையாது. மனதுக்குள்ளே பெருமை இருந்திருக்கலாம். ஆனால், அவள் வெளியில் ஒரு வார்த்தை கூட அது பற்றிப் பேசியது கிடையாது.
÷1987-இல் என்னை மத்திய அரசு கைது செய்தபோது, சிறையில் இருந்து, நான் வெளியில் வருகிற வரை, அம்மா யாரிடத்திலும் பேசவே இல்லை. சரியாக உண்ணவில்லை. தன் பிள்ளை கைதாகி, குடும்பத்துக்கு இழுக்குத் தேடி விட்டானே என்று மனதிற்குள் வருந்தினாள். போலீஸôல் கைது செய்யப்படுவது என்பது குடும்பத்துக்கு இழுக்கு, கெüரவக் குறைச்சல் என்று கருதிய தலைமுறை என் தாயுடையது. தினமணி பத்திரிகையை, குறிப்பாக, ஏ.என். சிவராமனின் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுத்துவிடாமல் படிக்கும் என் அம்மாவுக்குத் தவறு செய்தது அரசாங்கம்தான் என்கிற விஷயம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்த பிறகுதான் அவள் மனதில் பட்ட காயம் நீங்கியது.
÷அவள் எனக்கு ஏற்பட்ட அருமை, பெருமைகளைப் பெரிதாக நினைக்கவில்லையே, அது ஏன் என்று பல நாள் நான் யோசித்திருக்கிறேன். பிறகு, எனக்குப் புரிந்தது இதுதான். நான் என்னதான் புகழ் பெற்றவனாக இருந்தாலும் அவள் பார்வையில் நான் நான்கு பிள்ளைகளில் ஒருவன், அவ்வளவே. இப்படி எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை அவளிடம் இருந்ததால்தான் எங்கள் குடும்பம் கூட்டுக்குடும்பமாக இன்றும் தொடர்கிறது.
÷அதுமட்டுமல்ல, நாட்டின் பெரிய பெரிய தலைவர்கள், பெரிய பெரிய தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் அறிவுஜீவிகள் எல்லாம் என் அம்மாவின் காலில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார்கள். அதனால் அவள் பூரித்துப் போனது கிடையாது. தாழ்ந்திருந்தபோது அவளை உற்றார் உறவினர் சிறுமைப்படுத்தியதை அவள் எப்படி எதிர்கொண்டாளோ, அதுபோல உயர்ந்த நிலை வந்தபோதும் அதையும் எடுத்துக்கொண்டாள். அதனால்தான் அவள் ஒரு யோகி.
÷என் அம்மா தியாகத்தின் உருவான தாய்மைக்கு ஓர் உதாரணமே தவிர, விதி விலக்கல்ல. இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான குடும்பங்களில் என்னுடைய அம்மாபோல ஒரு தாய் தன்னுடைய உடல், பொருள், ஆவியை குடும்பத்துக்காகவும், சமுதாயத்துக்காகவும் தியாகம் செய்வதால்தான் இன்று நம் சமுதாயம், கலாசாரம், குடும்பங்கள் இவையெல்லாம் காப்பாற்றப்படுகின்றன. அதனால்தான் நம்முடைய பொருளாதாரம் வலிமையாக இருக்கிறது.

திங்கள், 11 பிப்ரவரி, 2013

ஹிந்து என்பதில் நமக்கு பெருமை ...............................!!!!


ஹிந்து என்பதில் நமக்கு பெருமை ...............................!!!!

உங்களுக்கு தெரியுமா லத்தீன் காத்தலீக் கிறிஸ்துவர், ஒரு சிரியன்
காத்தலீக் கிறிஸ்துவ சர்ச்சுக்க செல்ல மாட்டார், இவர்கள் இருவரும் மார்தோமசர்ச்சுக்கு செல்ல மாட்டார்கள், இவர்கள் மூவரும் பெந்தகோஸ்ட் சர்ச்சுக்கு செல்ல மாட்டார்கள், இவர்கள் நால்வரும் சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்கு செல்லமாட்டார்கள், இவர்கள் ஐவரும் செவந்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்சுக்கு செல்லமாட்டார்கள். இவர்கள் அறுவரும் ஆர்த்தடாக்ஸ் செல்ல மாட்டார்கள், இவர்கள் 
எழுவரும் ஜெகோபைட் சர்ச்சுக்கு செல்ல மாட்டார்கள். இதைப் போல் கிறிஸ்துவமதத்தில் கேரளாவில் மட்டும் 146 பிரிவுகள் உள்ளன. ஒருவர் மற்றவருக்காகதங்கள் சர்ச்சை பங்கிட்டு கொள்ள மாட்டார்கள். அருமை, ஒரு கிறிஸ்து, ஒரு பைபிள், ஒரு ஜெஹோவா, என்ன ஒற்றுமை !!

முஸ்லீம்களுக்கு இடையில், ஷியாவும் சுண்ணி பிரிவுகளும் அனைத்து
நாடுகளிலும், ஒருவர் மற்றவரை கொன்று குவிக்கின்றனர். இவர்களுக்கு இடையே எப்பொழுதும் சண்டைதான். ஒருவர் மற்றொருவருடைய மசூதிகளுக்கு செல்லமாட்டார்கள். இவர்கள் இருவரும் அஹமதியர் மசூதிக்கு செல்ல மாட்டார்கள்.
இவர்கள் மூவரும் சுஃபி மசூதிக்கு செல்ல மாட்டார்கள். இவர்கள் நால்வரும் முஜாஹிதீன் மசூதிக்கு செல்ல மாட்டார்கள். இதைப் போல் இவர்களுள் 13 பிரிவுகள் இருப்பதாய் தெரிகிறது. ஒருவர் மற்றவரை கொல்வது, குண்டு வீசுவது, அழிப்பது என்று வேறு !!
உம்.. ஈராக்கின் மீதான அமேரிக்க தாக்குதலுக்கு, சுற்றி உள்ள அனைத்து முஸ்லீம் நாடுகளும் ஆதரவு தந்தன. ஒரு அல்லா, ஒரு குரான், ஒரு நபி. என்ன ஒற்றுமை !!

ஹிந்துகளுக்கோ, 1280 புத்தகங்கள், 10000 விளக்கநூல்கள், லட்சத்துக்கு மேற்பட்டகூடுதல் விளக்க நூல்கள், 330 மில்லியன் கடவுள்கள், பலவிதமான குருக்கள், ரிஷிகள் நூற்றுக்கணக்கான மொழிகள். இருந்தும் அனைவரும் ஒரே கோவிலுக்கே செல்கின்றனர். ஒற்றுமை ஹிந்துக்களிடம் உள்ளதா மற்றவர்களிடம் உள்ளதா ?
கடந்த பத்தாயிரம் வருடங்களில் ஹிந்துக்கள் மதத்தின் பெயரில் தங்களிடையே சண்டையிட்டு கொண்டதில்லை
.

மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?


மதமாற்றத்தால் அழிவை எதிர்கொள்ளும் இந்து மதம்?



உலகின் எல்லா நாடுகளுக்கும் மதம் உண்டு. இந்தியாவிற்க்கு மட்டும் மதம கிடையாது.
ஆனால் இந்த நாட்டை ஒரு இஸ்லாமிய நாடாக ஆக்க வேண்டும் என்று அரபு
நாடுகளும், கிறிஸ்தவ நாடாக ஆக்க வேண்டும் என்று அமெரிக்க ஐரோப்பிய
நாடுகளும் கங்கனம் கட்டி வேலை செய்கின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
உலகத்திற்க்கு இந்து மதம் தவிற வேறெதுவும் தெரியாது. இந்து மதத்திற்கே
அந்தப் பெயர் கிடையாது. இந்து என்பது வாழும் தர்மம். ஆனால் இந்த தர்மம்
மதமாக்கப்பட்டு இப்போது மதமாற்றமும் செய்யப்பட்டு வருகிறது.

உதாரணமாக கிறிஸ்து கால அட்டவணைப்படியான முதலாம் நூற்றாண்டில் ஐரோப்பவிலும் இரண்டாம்
நூற்றாண்டில் அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகளிலும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது
போக, மூன்றாம் நூற்றாண்டில் அதே நிலை வலுவான ஆசியா கண்டத்திலும்
ஏற்பட்டது. இவ்வாறு மதம் மாத்தும் தொழில் செய்பவர்கள் மிஷனரிகளை
உருவாக்கினர். இந்த மிஷனரிகள் தான் அதி வேகமாக உலகம் முழுவதிலும்
மனிதர்களை மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மதத் தொடர்பு ஆதியில் இல்லாதிருந்த நாடுகளில் மதமாற்ற அவலத்தால் அந்நாட்டு
ஜனத்தொகையில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை எந்த அளவில் மாறியது என்பதை சற்று
பாருங்கள். அங்கோலா 90%, கிழக்கு தைமூர் 98%, ஈக்டோரல் 94% , புருண்டி
78%, மத்திய ஆப்ரிக்க ரிபப்ளிக் 82%, காங்கோ 62% , எத்தியோப்பியா 52%,
கபான் 79%, லைபீரியா 68%, நைஜீரியா 52%, பிலிப்பைன்ஸ் 84% தென்
ஆப்பிரிக்கா 78% , உகாண்டா 70% ஜையர் 90%.

இவ்வாறு மதம் மாற்றப்பட்ட பெரும்பாலான நாடுகளில் அடிப்படையில் பெரிய கலாச்சாரமோ
அல்லது மதங்களோ இல்லாமல் இருந்ததால் அவர்களால் இதை எளிதில் சாதிக்க
முடிந்தது. ஆனால் இந்தியாவில் பல ஆயிரக்கனக்கான வருடங்கள் பாரம்பரியமுள்ள
மதமும் வாழ்வியல் தர்மங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இங்கேயே
இவ்வளவு வேகமாக பரப்பப்படுகிறது.

இந்தியாவில் ஏறக்குறைய *4000 *மிஷனரிகள் பல மாநிலங்களில் தீவிரமாக மதமாற்றம் செய்து
வருகின்றன. சுதந்திர போராட்ட காலத்தில் திரிபுரா மாநிலத்தில்
கிறிஸ்தவர்களே கிடையாது. இன்று அங்கே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 1.2
லக்ஷம். அதே போல அருணாசல பிரதேசத்தில் 1921 இல் 1770 கிறிஸ்தவ்ர்க**ளாக
இருந்தவர்கள் இன்று 12 லக்ஷம். அங்கு சர்சுகள் மட்டும் 780 உள்ளன. இது
போன்றே வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும்
தீவிரமாக மதமற்றம் நடைபெறுகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு ஒரு சர்ச் கட்ட
வேண்டும் என்ற டார்கெட்டில் மத மாற்றம் நடைபெறுகிறது.

இத்தகைய மதமாற்ற தொழிலில் ஈடுபடும் மிஷனரிகளுக்கு அமெரிக்கவிலிருந்து மட்டும்
ஆண்டுக்கு 75000 கோடி ரூபாய்கள் வருகிறது என்கிறது புள்ளிவிபரம்.
யோசித்துப் பாருங்கள் . வெறுமனே ஒருவனை இந்த சாமியைக் கும்பிடு என்றால்
எப்படிக் கும்பிடுவான். அதனால் அவனுக்கு ஆதாயம் அதிகமாக இருந்தால் தானே
மாறப்போகிறான். அந்த ஆதாயத்தை கொடுக்கவே இந்த பண பரிவர்த்தனை.
180 தலைப்புகளில் பிரச்சார துண்டுப் பிரசுரங்கள், கட்டுரைகள், புத்தகங்கள்
ஆகியவை 300 க்கும் மேற்ப்பட்ட மொழிகளில் அச்சிடப்பட்டு
விநியோகிக்கப்படுகின்றன. இவற்றில்
பெரும்பாலும் இந்துக்கடவுளர்களை சாத்தான்கள், கிறிஸ்தவத்தை
கடைபிடிக்காதவர்கள் நரகத்தை அடைவார்கள் என்றும் மிரட்டும் வாசகமே அதிகம்
இருக்கும்.

சராசரியாக ஒரு மனித மத மாற்றத்திற்க்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்
செலவிடப்படுகிறது. மதமாற்றம் தொய்வின்றி நடக்க மிஷனரிகளுக்கு நிலங்கள்
கட்டிடங்கள் என்று நிலைச்சொத்துக்களும் , அவற்றை நடத்துபவர்களின் சுகபோக
வாழ்க்கைக்கு தேவையான அளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
1500வது வருடத்திலேயே 30 லட்சம் மிஷனரிகள் உருவாகியிருந்த நிலையில், இன்று
65 கோடி மிஷனரிகள் முழுவேகச் செயல்பாட்டில் உள்ளன. இதில் வெட்கப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் இவற்றில் பாதி இந்தியர்களாலேயே
நடத்தப்படுகிறது. சுக போகத்திற்கும் பணத்திற்க்கும் ஆசைப்பட்டு விலை
போனவர்கள் தான் இவர்களில் அதிகம்.

*
*==============
மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மதம் தான் அதிகம் அழிவுக்கு உள்ளாக்கப்
படுகிறது. இந்த நிலையில் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நம் சொந்த கடவுளரை இழிவு
படுத்துவதை பகுத்தறிவு என்ற பெயரில் செய்து வருகிறார்கள் .அதாவது நம்
கண்ணைக் குத்திக் கொள்ள நம் விரல்களையே
பயன்படுத்தும் அளவிற்க்கு நம்மை முட்டாளாக்கி இருக்கிறார்கள். இவற்றை
யெல்லாம் சிந்திக்க வேண்டும். இந்து தர்மத்தை பாதுகாப்பது இந்த தர்மத்தைக்
கடைபிடிக்கும் ஒவ்வொருவருக்கும் உள்ள தார்மீக உரிமையாகும். கடமையும் கூட.

யோசியுங்கள்...

இப்தார் விருந்தில் கலந்து கொள்ளும் கருணாநிதி
இஸ்லாத்தில்
தனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று கூறிக்கொள்கிறார். ஆனால் அதே ராமர் பால
பிரச்சனை வரும் போது கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் கடவுளை
அவமதித்துப் பேசுகிறார்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

வேறு எந்த மதத்தின் சம்பிரதாயங்களையும் காயப்படுத்தாத அரசியல் வாதிகள் இந்து
தர்மத்தின் பண்டிகைகளை தங்கள் இஷ்டத்திற்க்கு மாற்றியமைப்பது எதற்க்காக.
அதுவும் தமிழ் புத்தாண்டை ஆங்கிலப்புத்தாண்டு காலத்துடன் இணைக்க
முற்ப்படுகிறார்கள்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

தரங்கம்பாடி கடற்க்கரையில் டச்சுக் கோட்டை அருகிலே ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த
சிவன் ஆலயம் இடிந்த (இடிக்கப்பட்ட?) நிலையில் வெறும் சிவன் சந்நிதி மட்டும்
பூட்டப்பட்டு காட்சி அளிக்கிறது. ஆனால் அதற்குப் பக்கத்திலே ஆடம்பரமாக
தேவாலயங்கள் தினந்தோறும் பிரார்தனைகளுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
அந்த ஊரில் இந்த சிவன் ஆலயத்தை செப்பனிடவும் அந்த பழமையின் சின்னத்தைக்
காக்கவும் அரசு முன்வரவில்லை. அப்படியே ஊர் மக்கள் முன் வந்தாலும் தமது
செல்வாக்கை வைத்து இந்த மிஷனரிகள் தடுத்து விடுகின்றன. பழமையின் சின்னம்
என்ற பெயரில் டச்சுக் கோட்டையின் மேல் அரசு காட்டும் அக்கறை, இந்த சிவன்
கோவில் மேல் ஏன் காட்டப்படுவதில்லை.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

மிஷனரிகள் இந்தியாவில் நிலங்களும் கட்டிடங்களும்
வாங்கிக் குவிக்கும் வேலையில் , நம்மூர் அரசியல் வாதிகள் இந்து மத கோவில்
நிலங்களை விற்று காசாக்குகிறார்கள். இதே நடவடிக்கைகளை முஸ்லீம்களின்
வஃக்போர்டு நிலங்களின் விஷயத்தில் செய்வார்களா?
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே?

யோசியுங்கள்...

குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் இந்துக்கள் மட்டுமே
காண்பிக்கப்படுகிறார்கள். அதாவது இந்து அடையாளத்துடன் இருக்கும் ஆண் ,
பெண் மட்டுமே. வேறு எந்த மதத்தினரும் காண்பிக்கப்படுவதில்லை. இந்துக்கள்
மட்டுமே குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் மக்கள்
தொகை பெருகினால் பரவாயில்லையாம்.
இது இந்து மதத்தை திட்டமிட்டு அழிக்கும் செயல் தானே!

யோசியுங்கள்...

இந்தியாவில் தினம் கோடிக்கணக்கான கோவில் வருவாயில் முக்கால் பாகம் அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மற்ற மத வருவாயை இவ்வாறு அரசு எடுக்க எவனும் துணிவதில்லை.

யோசியுங்கள்...

வசிக்க இடமில்லாத ஒரு பிக்பாக்கெட், போலீஸைக் கண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும்
ஒரு ரவுடி கூட பாதிரியாராக மாறி விடுகிறான். அவனுக்கு சொந்த பங்களா, கார்
என்று வசதிகள் வந்து விடுகின்றது. இன்னும் வேகத்துடனும் ஆர்வத்துடனும்
அவன் மத மாற்றத்தில் ஈடுபடுகிறான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம். கோவிலில் பூஜை செய்வதே குலத்தொழிலாக
நம்பியிருக்கும் பிராமணர்களை தொடர்ந்து வறுமையிலேயே
வைத்திருக்கிறோம். அவர்களை விரட்ட வேண்டும் அடியோடு ஒழிக்க வேண்டும்
என்றும் கூவிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு தட்டில் போடும் இரண்டு
ரூபாய் காசுக்கு சட்டம் பேசுகிறோம்.

இந்து தர்மம் வளர்வதற்க்கு இது உதவுமா?

நாம் வேறு மதத்தவரை அவமதிக்க வேண்டாம். மற்றவர்களை புன்படுத்துவது நம் தர்மமும்
அல்ல**. குறைந்த பட்சம் நமது மத அடையாளங்கள் அவமதிக்கப்படாமலாவது
பார்த்துக் கொள்ள வேண்டாமா? சில விஷயங்களையாவது தவறாமல் கடைபிடியுங்கள்.

இன்று இந்தியாவில் இருக்கும் மதமாற்றிகள் அனைவரும் ஆசையினாலும் ஆங்கிலேய
அடக்குமுறையாலும், பணத்தாலும் மாற்றப்பட்ட இந்துக்களின் சந்நதியினரே. அவரகளை அவர்களை
பாதையிலேயே விட்டுவிடுவோம், ஆனால் அந்த கொடிய நோய் நம்மை பற்றாமல் நம்மை
காப்பாற்றிக்கொள்வோம்

*
ஜாதிக்கட்டுகளை விட்டு இந்துவாக இருப்பவர்கள் எல்லோரும்
ஒன்று என்று பழக முற்படுவோம். ஒருவருக்கொருவர் கலப்புத் திருமணம் செய்து
சம்பந்தியாகத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்களாகவாவது
இருப்பது அவசியம் என்று நினைக்க வேண்டும்.

யோசியுங்கள்....